×

 வீட்டு முன் நிறுத்திய காரை எடுக்க சொன்னவருக்கு அடி: வாலிபர் கைது

அண்ணாநகர்: வீட்டின் முன் நிறுத்தப்பட்ட காரை எடுக்க சொன்னவரை தாக்கிய நபரை கைது செய்தனர்.சென்னை அரும்பாக்கம் பி.எச் ரோடு பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தன் (55). இவரது வீட்டின் முன் நேற்று முன்தினம் மாலை ஒரு வாலிபர் காரை நிறுத்திவிட்டு பேசியுள்ளார். இதை பார்த்த விவேகானந்தன், அந்த வாலிபரிடம் சென்று இங்கு காரை நிறுத்தக்கூடாது என்று வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் கோபம் அடைந்த வாலிபர், அங்கு கிடந்த கல்லை எடுத்து விவேகானந்தனை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிவிட்டார். படுகாயம் அடைந்த அவரை அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுபற்றி விவேகானந்தன் கொடுத்த புகாரின்படி, அமைந்தகரை போலீசார் வழக்குபதிவு செய்து திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த கார் டிரைவர் ஹரிகரன் (26) என்பவரை கைது செய்தனர்….

The post  வீட்டு முன் நிறுத்திய காரை எடுக்க சொன்னவருக்கு அடி: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Arumbakkam BH Road ,Chennai ,
× RELATED சாரம் சரிந்து தொழிலாளி பலி தனியார்...